Get More information About Lastest Tips & Tricks Subscribe Youtube Channel!

குரங்கும் முதலையும் (Monkey and Crocodile in Tamil) - தமிழ் சிறுகதைகள் (Fairy Tales Stories)

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 

குரங்கும் முதலையும் (Monkey and Crocodile in Tamil) - தமிழ் சிறுகதைகள் (Fairy Tales Stories)

 

ஒரு கடற்கரை அருகே பெரிய நாவல்மரம் ஒன்றிருந்தது அதில் எப்பொழுதும் பழங்கள் இருந்துகொண்டேயிருக்கும். அந்த மரத்தில் அப்பு என்றொரு குரங்கு இருந்துவந்தது. 

ஒருநாள் கராலமுகன் என்ற பெரிய முதலை ஒன்று அந்த நாவல் மரத்தின் அருகில் வந்தது. அப்பு அதைப் பார்த்து 

நீ என் விருந்தாளி, அமுதத்துக்கொப்பான நாவற்பழங்களைத் தருகிறேன். சாப்பிடு" என்று குரங்கு கூறி, நாவற்பழங்களை முதலைக்குக் கொடுத்தது. 

பழங்களை முதலை சாப்பிட்டது. வகுநேரம் குரங்குடன் பேசி இன்பமடைந்தபின் தன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றது இப்படியே நாள்தோறும் முதலையும் குரங்கும் நாவல்மரத்தின் நிழலையடைந்து நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசி இன்புற்றுக் காலம் கடத்தி வந்தன. தான் சாப்பிட்டதுபோக மிஞ்சிய நாவற்பழங்களை முதலை வீட்டுக்குக் கொண்டுபோய் தன் மனைவிக்குக் கொடுத்து வந்தது. 

ஒருநாள் முதலையின் மனைவி "அமிருதம் போலிருக்கும் இந்த நாவற்பழங்கள் உங்களுக்கு எங்கே கிடைக்கிறது." என்று முதலையின் மனைவி கேட்டது. 

அன்பே, அப்பு என்றொரு குரங்கு இருக்கிறது. அது என்னுடைய நெருங்கிய நண்பன். அதுதான் இந்தப் பழங்களை எனக்கு அன்போடு தருகிறது" என்றது முதலை. 

அதற்கு முதலையின் மனைவி அமிர்தம்போ இருக்கும் இந்தப் பழங்களை எப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவனுடைய நெஞ்சும் கட்டாயம் அமிர்தம் போலத்தான் இருக்கும். நீ என்னை மதிக்கிறாய் என்றால் எனக்கு அந்தக் குரங்கின் நெஞ்சைக் கொண்டுவந்துகொடு அதை நான் சாப்பிட்டு நோயும் முதுமையும் இல்லாமல் என்றும் உன்னோடு விளையாடிக்கொண்டிருப்பேன்" என்றது. 

அன்பே, முதலாவதாக அது நமக்குச் சகோதரன் மாதிரி இரண்டாவதாக, அது நமக்குப் பழங்களைத் தருகிறது. எனவே அதை நாம் கொல்லமுடியாது. இந்த வீணான ஆசையை விட்டுவிடு" என்றது அதற்கு முதலையின் மனைவியோ, "அந்த குரங்கை எனக்கு கொடுக்கவில்லை என்றால் நான் இறந்துவிடுவேன்" என்று கோவமாக சென்றது 

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அதன் கண்களில் நீர் நிறைந்தது. "இனி நான் என்ன செய்வேன்? அந்தக் குரங்கை எப்படிக் கொல்வது?" என்று சிந்தித்தபடியே குரங்கிடம் போயிற்று 

வெகுநேரம் கழித்து முதலை கவலையோடு வருவதைக் குரங்கு பார்த்தது. 

நண்பனே ஏன் இவ்வளவு நேரம்? ஏன் சந்தோஷத்தோடு பேசமாட்டேன் என்கிறாய்? நல்ல நீதிகளையும் சொல்ல மாட்டேன் என்கிறாய்" என்று குரங்கு கேட்டது. 

"நண்பனே, என் னவி ' நன்றி கெட்டவனே, என் முகத்தில் விழிக்காதே தினந்தோறும் நீ பழங்களைப் பெற்றுச் சாப்பிடுகிறாய் ஆனால் அதற்குப் பதில் நண்பனிடம் உபச்சாரம் செய்யும் முறையில் அதை உன் வீட்டு வாசலுக்கும் நீ அழைத்து வரவில்லையே! இந்த மன்னிப்பே கிடையாது" என்றது. 

ஆகவே, "நீ அப்புவை நம் வீட்டுக்கு அழைத்து வா அப்போதுதான் நீ பதில் உபச்சாரம் செய்வதாகும் இல்லாவிட்டால் நீ என்னை இனிமேல் உயிரோடு பார்க்க முடியாது. மறு உலகத்தில் தான் பார்க்க முடியும்" என்று சொன்னாள். அவள் சொற்களைக் கேட்டுவிட்டு உன்னிடம் வந்திருக்கிறேன். 

உன் விஷயமாய் அவளோடு சண்டை போட்டதிலே இவ்வளவு நேரமாகிவிட்டது. நீ என் வீட்டுக்கு வா! என் மனைவி ஆவலோடு உன்னை எதிர்பார்த்து வரவேற்பதற்குரிய ஏற்பாடுகளை செய்திருக்கிறாள்" என்றது முதலை. 

குரங்குக்கு ஆனந்தம் பிறந்தது. "நண்பனே அப்படியானால் சீக்கிரமாகக் கிளம்பலாமே. ஏன் தாமதிக்கவேண்டும்? இதோ நான் உன் முதுகின்மேல் ஏறிக்கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு, குரங்கு முதலையின் முதுகின்மேல் ஏறிக்கொண்டது. 

ஆனால் ஆழமான பார்த்துக் குரங்கு பயந்து கடலில் முதலை போவதைப் நடுங்கிப்போயிற்று "நன்பா மெதுவாகப் போ! அலைகள் அடித்து என் உடம்பெல்லாம் நனைந்துவிட்டது" என்றது. 

அதைக் கேட்டதும் முதலைக்கு ஒரு யோசனையுண்டாயிற்று. இந்தக் குரங்கு என் முதுகிலிருந்து நழுவினால் ஒரு அங்குலம் கூட அப்பால் செல்லமுடியாது. அத்தனை ஆழமான கடல் இது. என் பிடியில் சிக்கி கொண்டுவிட்டது. ஆகவே இதனிடம் என் நிஜ நினைப்பை சொல்லிவிடுகிறேன். தன் இஷ்ட தெய்வத்தை அது நினைத்து பிராத்தித்துக் கொள்ளட்டும் என்று எண்ணியது. 

குரங்கைப் பார்த்து "நண்பனே என் சொல்லியபடி உன்னை நம்ப வைத்து மனைவி உன்னைக் கொல்வதற்காக வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். இனி உன் இஷ்ட தெய்வத்தை பிராத்திக்கொள்" என்றது முதலை. 

அண்ணா, உனக்கோ அண்ணிக்கோ நான் என்ன தீங்கு செய்தேன்? என்னை ஏன் கொல்லப்பார்க்கிறீர்கள்?" என்று ரங்கு கேட்டது. 

கேள், நீ கொடுத்த பழங்கள் அவளுக்கு அமிர்தம் போல் ருசியாயிருந்தன. ஆகவே உன் நெஞ்சைத் தின்ன வேண்டும் என்று அவள் ஆவலாயிருக்கிறாள். அதனால்தான் இப்படிச் செய்தேன்" என்றது முதலை. 

உடனே சமயோசித புத்தியுள்ள குரங்கு அடடா அப்படியா சங்கத்? அதை நீ ஏன் அங்கேயே என்னிடம் சொல்லவில்லை? நண்பனே, ருசி மிகுந்த நாவற்பழங்களை நாவல்பழத்தின் பொந்தில் மறைத்து வைத்திருக்கிறேன். முன்பே சொல்லியிருந்தால் அண்ணிக்காக அதை எடுத்துக்கொண்டு வந்திருப்பேனே அந்த ருசி மிகுந்த நாவற்பழங்களை சாப்பிட்டால் நீண்ட காலம் இளமையுடன் உயிர் வாழலாம் என்றது குரங்கு. 

அதைக் கேட்டதும் முதலைக்கு ஆனந்தம் ஏற்பட்டது "நண்பனே, அப்படியானால் அந்த நாவற்பழங்களை எனக்குக் கொடு, என் துஷ்ட மனைவி அதைச் சாப்பிட்டு தன் உபவாசத்தை முடிப்பாள், உன்னை நாவல் மரத்துக்கே திரும்ப அழைத்துச் செல்கிறேன்" என்று சொல்லிற்று. 

சொன்னபடியே முதலை நாவல்மரத்தடியை நோக்கித் திரும்பிச் சென்றது வழி நெடுக குரங்கு ஒவ்வொரு தெய்வத்தையும் நூற்றுக்கணக்கான முறை வேண்டிக்கொண்டே போயிற்று. 

எப்படியோ ஒரு விதமாக கரைக்கு வந்ததும், உயர உயரத் தாவிக் குதித்துச் சென்ற அந்த நாவல் மரத்தின்மேல் ஏறிக்கொண்டது ஏறிக்கொண்டே. "நல்லகாலம் நான் பிழைத்துக்கொண்டேன். நம்பிக்கை வைப்பதால் விபத்து ஏற்பட்டு வேரோடு அழிந்து விடுகிறது. என்று சொல்வதில் நியாயமிருக்கிறது. ஆகவே, இன்றைக்கு நிஜமாகவே நான் மறுபிறப்பெடுத்திருக்கிறேன்" என்று குரங்கு எண்ணியது. 

குரங்கிடம் முதலை, "நண்பனே, நாவற்பழங்களை கொடு எனக்கு" என்றது. 

குரங்கு சிரித்துவிட்டு நிர்ப்பயமாகப் பதில் சொல்லிற்று. "சீ. மூடா! நம்பிக்கைத் துரோகி உன்னுடைய உண்மையான குணம் எனக்கு தெரிந்துவிட்டது. உன் வீட்டைப் பார்த்துக்கொண்டு போய்விடு, இனிமேல் இந்த நாவல்மரத்தடிக்கு வராதே!" என்றது குரங்கு. 

முட்டாள்தனமாக இதனிடம் என் எண்ணத்தை ஏன் வெளியிட்டேன்? எப்படியாவது இதனுடைய நம்பிக்கையைப் பெற வழியுண்டா ? நம்பவைக்கப் பேசிப்பார்க்கிறேன்" என்று எண்ணியது. 

நண்பனே விளையாட்டுக்காகத்தான் அப்படிச் சொன்னேன் உன் மனதை அறிய விரும்பினேன் அவ்வளவுதான். என் வீட்டுக்கு விருந்தாளியாக வா! அண்ணி உன்னைப் பார்க்க ஆவலோடிருக்கிறாள்" என்று முதலை சொல்லிற்று. 

துஷ்டா, உடனே நீ போய்விடு நான் வரமாட்டேன் குரங்கு அதைக்கேட்டு முதலை மிகுந்த என்றது வெட்கமடைந்தது. அந்த இடத்தை விட்டுச் சென்றது. 

நீதி: ஒருவன் மற்றவர்களை ஏமாற்ற நினைத்தால் கண்டிப்பாக ஒருநாள் எல்லாவற்றையும் இழந்து ஏமாறுவான்.

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.